October 15, 2014

கையடக்க தொலை பேசிகளில் தங்கம் ?

பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியுமென ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்- நிக் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் .
இதனால் கையடக்கதொலை பேசிகளிலுருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான முயற்சிகள் மின்னணு தொழில்நுட்பத் துறையில் அதிக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.

இது குறித்த பல்வேறு ஆய்வுகள், மதிப்பீடுகள் இருந்த போதிலும், பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு உபயோகப்படுத்தப்பட்ட கையடக்கபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கை ஒன்றில் 41 கையடக்கபேசிகளிலிருந்து ஒரு கிராம் தங்கத்தை எடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 கையடக்கதொலைபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றது.

இதன்படி ஒரு டன் பயன்படுத்தப்பட்ட கையடக்கதொலைபேசிகளிலிருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என கருதப்படுகிறது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஜெனஸ் பொடோக்நிக் கூறுகிறார், தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் தொலைபேசியில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.


தொலைபேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி தொலைபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.

தன்படி பார்க்கும்போது, நம்மிடம் இருக்கும் ஒரு தொலைபேசியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பானது சராசரியாக இன்றைய நிலையில் வெறும் நூறு (இந்திய) ரூபாய்க்கும் குறைவானதாக இருக்கின்றது. ப்பெறுமானம் அதை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள்.

எனவே பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது வர்த்தக ரீதியில் லாபம் தரக்கூடிய தொழில் அல்ல என்கிறார்கள் இவர்கள்.

இருந்தும் வேறு சில மின்னணு தொழில்நுட்பவியல் வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்குமென்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்குமென்றும் வாதாடுகிறார்கள்.

இவ்வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறமிருக்க, இதிலிருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி தொலைபேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி தொலைபேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்.

0 comments:

Post a Comment