September 7, 2015

மதிப்பு கூட்டப்பட்ட பனம்பொருட்கள்

பனை உலகின் பூக்கும் தாவரங்களில் பழமையானதாக கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக பல வகையான பனைகளிலிருந்து இனிப்புகள், புளிக்க வைத்த பானங்கள், பனப்பாகு, பனை வெல்லம் பனையிலிருந்து பெறப்படுகிறது. உலகின் முதல் சர்க்கரை ஆதாரமாக அரங்கா பினாட்டா எனும் பனைவகை விளங்குகிறது. கி.மி 4-ஆம் நூற்றாண்டில் பொராசஸ் ஃபிலாபெலிபர் பனை வெல்லத்தை பற்றி மன்னர் சந்திர குப்தரின் கிரேக்க தூதுவர் மற்றும் வரலாற்று வல்லுவரான மெகஸ்தனிஸ் குறிப்பு வரைந்துள்ளார். இலங்கையில் காரியோடா யுரன்ஸ் சாற்றிலிருந்து பிரிதெடுக்கப்படும் வெல்லம் மற்றும் பாகு பழங்காலத்திலிருந்து முக்கிய சர்க்கரை ஆதாரமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் பனைச்சாறு பாரம்பரிய மது உற்பத்திக்கு பயன்படுகிறது.
பெரும்பாலான பனை வகைகள் பனைசாறுக்கு மட்டுமல்லாது பழங்கள், கட்டுமானப்பொருகட்கள், எரிபொருள், இழைகள், மெழுகு போன்று பலவகைகளில் பயன்படுகிறது. கிராமபுற மக்களுக்கு சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக பனை விளங்குகிறது. காந்தி பொராசஸ் ஃபிலாபெலிபர் வகை பனையை வறுமையை போக்கும் வகையான மூலதனமாக கருதினார். தமிழ் நாட்டில் அருணாச்சலம் அவர்களால் இயற்றப்பட்ட தமிழ் பாரம்பரிய கவிதை தொகுப்பான தலா விலாசம் பனையின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டு பனையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் 801 வகையான பனைப்பொருட்களை பட்டியலிடுகிறது. குடிசை தொழிலுக்கு ஏற்றதாக பனையை இயற்கை படைத்திருக்கிறது.பனை மரங்கள் இருக்குமிடத்தில் பனை வெல்லம் எளிதாக பெறலாம்.உதாரணங்கள் சில.

நுங்கு பழச்சாறு கலந்த பானம்

நுங்கு தயார் நிலை பானம்

நுங்கு பழப்பாகு (ஜாம்)

நுங்குப்பாகாய் வடித்த பழப்பாகு (ஜெல்லி)

இன்னும் பல...

0 comments:

Post a Comment