April 1, 2015

கருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் நிலக்கடலை

நமது நாட்டில் உற்பத்தியாகின்றதும் உற்பத்தியாகாததுமான பருப்பு வகைகளில் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உயர் ரக பருப்பு வகைகள் மட்டும்தான் நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்ப‍தாக மக்க‍ள் மத்தியில் ஒருதவறான எண்ணகக்கரு நிலவுகிறது. 

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Arachis_hypogaea_-_K%C3%B6hler%E2%80%93s_Medizinal-Pflanzen-163.jpg/220px-Arachis_hypogaea_-_K%C3%B6hler%E2%80%93s_Medizinal-Pflanzen-163.jpg


ஆனால் உண்மையில் நிலக் கடலையில் மேற்சொன்ன‍ எல்லா உயர் ரக பருப்பு வகைகளிலும் இருப்பதை போன்று அளவுக் கதிகமான சத்துக்கள் உள்ள தோடு. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண் டு.


இந்நிலக்கடலையில் பெண்களுக்கு பெரிதும் தேவை யான போலிக் அமிலம், பொஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்த நாகம், இரும்பு, விட்டமின்கள் மற்றும் குறுட்டாமிக் அமிலம் அதிகளவு நிலக் கடலையில் நிறைந்துள்ளது.


குறிப்பாக நிலக்கடலை உட்கொள்ளும் பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர் ச்சியை இது சீராக்குவதோடு  பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு ஏற் படுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுபகின்றது, அத்தோடு  மார்பகக் கட்டிகள் உண்டாவதையும் தடுக்கிறது. மே லும் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப் பை சீராக செயல்படுவதுடன் கருப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது தடுப்பதோடு குழந்தைப் பேறும் உண்டாவதையும்  அதிகப்படுத்துகிறது


 மற்றும் கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுப்பதோடு,  நீரழிவு நோய் பெண்களுக்கு ஏற்படாமல் தடுப்பதிலும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாப்பதிலும் இதன்பங்கு மகத்தானது.



0 comments:

Post a Comment