Bringing you the latest information in the field of Technology and Research

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Authored by National Vidatha Network Writers

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Adapted from renowned international sources

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Educational blog for future generation of the nation

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

Project of the Ministry of Science,Technology and Research, Sri Lanka

විද්‍යා,තාක්ෂණ හා පර්යේෂණ අමාත්‍යාංශයෙන් ජාතියේ දරුවන්ට පිදෙන තිළිණයකි | நாட்டு குழந்தைகளுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் வெகுமதி

March 3, 2017

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.

ஏறக்குறைய எட்டு பில்லியன் டொலர் (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா!) செலவில் உருவாகிவரும் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கி வருகிறது நாஸா!
கண்ணாடிகளுக்குப் பதில், தங்கத்தாலான பதினெட்டு அறுங்கோணங்கள் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் விட்டம் மட்டும் 6.5 மீற்றர். இதன்மூலம், விண் கதிர்கள் ஊடுருவ மாட்டா. இந்தப் பாரிய தங்கப் பரப்பின் மூலம், சூரியனில் இருந்து நட்சத்திரங்கள் பெறும் ஒளியைவிட ஏழு மடங்கு அதிகமான ஒளியைப் பெற்றுக்கொள்ளும். அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே தான் சேகரிக்கும் தகவல்களைப் பரிமாறவிருப்பதனால், கடும் குளிரான சூழலில் இது இயங்கத் தேவையான முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைவில் இந்தத் தொலைகாட்டி நிலைநிறுத்தப்பட்டால், ‘பிக் பாங் தியரி’ என்று சொல்லப்படும் அண்டத்தின் முதல் வெடிப்புக்கான காரணத்தை ஆராய முடியும் என்று நாஸா நம்புகிறது. அதாவது, இந்தப் பேரண்டம் உருவாவதற்குக் காரணமாக இருந்த முதல் ஒளியைக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஒளியே கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய விண்மீன் திரள்கள் உருவாகக் காரணம்.
அந்த ஒளியை இந்தத் தொலைகாட்டி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும், இதன்மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய பல நம்ப முடியாத, ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற முடியும் என்றும் விண்மீன் திரள்களின் நடுவே காணப்படும் ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையை ஆராய முடியும் என்றும் நாஸா உறுதியாக நம்புகிறது.
என்றாலும், இந்தத் தொலைகாட்டியை அவ்வளவு எளிதாக விண்ணில் செலுத்தி விட முடியாது என்றும் நாஸா தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில், க்றீன்பெல்ட்டில் மிக மிகப் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைகாட்டி முழுமைபெற்றதும் இதை, காலநிலைப் பண்புகளால் தாக்கப்படமுடியாத ஒரு கொள்கலனுக்குள் வைக்கப்படவேண்டும். பின்னர் இதை ஏவுவதற்காக அன்ட்ரூஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். இது மிக மிகச் சவால்கள் நிறைந்தது.
ஒரு ட்ரக் மூலம் மிக மிக மெதுவாகவும், மென்மையாகவும் இரவு நேரத்தில் இடம் மாற்றப்பட வேண்டும். வீதிகளில் மேடு, பள்ளம், குழிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சில வாகனங்கள் இந்த ட்ரக்கின் முன்புறம் செல்லும். இதற்காக இந்த இரண்டு நகரங்களினதும் பிரதான வீதிகளை மூட வேண்டியிருக்கும். இவ்வாறு மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்படும் தொலைகாட்டி, இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சி-5சி என்ற விசேட ரக விமானத்தில் மிகக் கவனமாகப் பொருத்தப்படும்.
இந்த விமானத்தின் மூலமாக ஹூஸ்ட
ன் ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு விண்வெளியைப் போன்ற புறச்சூழல் கொண்ட - அதாவது ஈர்ப்புவிசை அற்ற - ஒரு அறையில் மிதக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்படும்.
பின்னர் அங்கிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே, சூரிய ஒளியில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் திசையறை தொழில்நுட்பங்கள் என அனைத்தும் பொருத்தப்படும். பின்னர், வட அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவுக்கு, பனாமா கால்வாய் வாயிலாக கவசப் படகு ஒன்றில் எடுத்து வரப்படும். அங்கிருந்தே இந்தத் தொலைகாட்டி விண்ணில் ஏவப்படும்.
விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்பின்படி அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தத் தொலைகாட்டி விண்ணுக்கு ஏவப்படும் என்று தெரியவருகிறது. எனினும், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவிலேயே இது விண்ணில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரியவருகிறது.
பூமியில் இருந்து மிக மிக அதிக தொலைவில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இதில் ஏதும் பழுதுகள் ஏற்பட்டால் அங்கு போய் அதைச் சரிசெய்வது முடியாத காரியம். எனவே, தற்போது இந்தத் தொலைகாட்டியை விஞ்ஞானிகள் மிகக் கவனமாக உருவாக்கி வருகிறார்கள்.

பன்றியும் மனிதனும் இணைந்த புதுமையான உயிரினம்

பெண் பன்றியின் கருமுட்டைக்குள் மனித மரபணுக்களைச் செலுத்திய பின், அதை மீண்டும் பன்றியின் கருப்பையிலேயே வைத்து வெற்றிகரமாக வளரச் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நான்கு வார கால வளர்ச்சியின் பின் இதயம், கல்லீரல் மற்றும் நியூரோன்கள் என்பன அதில் உருவாகியிருக்கின்றன. மேலும் பன்றியின் அமைப்பைக் கொண்ட சிறு உடலும் உருவாகியிருக்கிறது.
மனிதனும் பன்றியும் இணைந்த இந்தக் கருச்சினைக்கு ‘கிமேரா’ (Chimera) என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். கிமேரா என்பது கிரேக்க புராணங்களில் குறிப்பிடப்படும் சிங்க முகமும் ஆட்டின் உடலும் பாம்பின் வாலும் கொண்ட ஒரு உயிரினம். கலப்பு உயிரினங்களை பொதுவாக இந்தப் பெயரைக் கொண்டே அழைப்பர். அதன்படி, மனிதன்-பன்றி கலந்த இந்த உயிரினத்துக்கும் அதே பெயரைச் சூட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மனிதனுக்குத் தேவையான உடலுறுப்புக்களை பிற உயிரினங்களிடம் வளர்த்து எடுக்க முடியுமா என்பதைக் கண்டறியும் நோக்குடனேயே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட இதுபோன்ற ஆராய்ச்சிகளில் இந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த அபூர்வ கலப்பினத்தை தொடர்ந்து வளர்க்கப்போகிறார்களா, முழுமையாக வளருமா என்பன பற்றி அவர்கள் எதுவித விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

மருத்துவக் குணங்கள் நிறைந்த மாதுளம் பூ!

நமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்து.

* உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.
 
* மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.இல்லையென்றால் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர ரத்த சுத்தி கிடைக்கும்.
 
* அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.
 
* மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளைஞம் அருந்தி வந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல் குணமாகும்.
 
* பெண்களுக்கு கருப்பை நன்கு வருவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
 
* மாதுளம் பூக்களை நைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர்விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவும்.
 
* மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாது பலம் பெறும்.
 

மூட்டு, வாத நோயை அகற்றும் முடக்கற்றான் கீரை!

முடக்கு அறுத்தான் என்பதற்கு முடக்கும் வாதத்தை அறுக்கும் என்று பொருள்படும். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்  மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்  உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும்  நீங்கும்.
 
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில்  போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு  தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில்  சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சை பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
 
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
 
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும். சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது இவர்கள் முடக்கற்றான்  இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
 
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு  எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்

பசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது.  இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை கண்­டு­பி­டிக்கும் கரு­வி­யாக மாற்றி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் புதுமை படைத்­துள்­ளனர்.அவர்கள் பசளி இலை­க­ளுக்குள் நுண்­ கு­ழாய்­களை உட்­செ­லுத்தி அவற்றை வெடி­பொ­ருட்­களைக்  கண்­டு­பி­டிக்கும் உணர் ­க­ரு­வி­யாக மாற்­றி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி பசளித் தாவ­ர­மா­னது எதிர்­கா­லத்தில் நிலக்­கண்­ணி­வெ­டிகள் உள்­ள­டங்­க­லான வெடி­பொ­ருட்­களை அகற்றும் கரு­வி­யாக நிபு­ணர்­களால்  பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என  மேற்­படி கண்­டு­பி­டிப்பை மேற்­கொள்­வதில் பங்­கேற்ற  அமெ­ரிக்க மஸா­சுஸெட்ஸ் தொழில்­நுட்ப நிறு­வ­கத்தைச் சேர்ந்த பொறி­யியல் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.
அவர்கள் நிலக்­கண்­ணி­வெ­டி­க­ளிலும் ஏனைய வெடி­பொ­ருட்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­படும்  நைத்­தி­ரோ ­அ­ரோ­மற்றிக்ஸ் என்ற இர­சா­ய­னத்தைக் கண்­ட­றியும் வகையில் அந்த பச­ளிக்­கீ­ரையை வடி­வ­மைத்­துள்­ளனர்.
இந்த இர­சா­யனம் நிலக்கீழ் நீரில்  அவ­தா­னிக்­கப்­படும் பட்­சத்தில் பசளித் தாவர இலை­களில் உட்­செ­லுத்­தப்­பட்­டுள்ள நுண் குழாய்கள், அகச்­சி­வப்பு புகைப்­ப­டக்­க­ரு­விகள் மூலம் இனங்­கண்­ட­றி­யப்­ப­டக்­கூ­டிய ஒளிர்வு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்தும்.
மேற்­படி புகைப்­ப­டக்­க­ரு­வியை ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை ஒத்த அளவிலுள்ள சிறிய கணினியில்  இணைத்து பயன்படுத்த முடியும்.  அந்தக் கணினியானது பெறுபேற்றை  பயன்பாட்டாளருக்கு இலத்திரனியல் அஞ்சலாக அனுப்பி வைக்கும்.

பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம்

பொருட்­களை வைத்த இடத்தை மறந்துவிட்டு  தேடு­­வர்­­ளுக்கு உதவும் வகையில் மைக்­ரோசொப்ட் நிறு­­­மா­னது புதிய தொழில்­நுட்­­மொன்றைக்  அறி­மு­கப்­­டுத்­தி­யுள்­ளது.
உயர் தொழில்­நுட்ப மூக்குக் கண்­ணாடி  வடி­வி­லான இந்த ஹோலோலென்ஸ் உப­­ரணம்  பயன்­பாட்­டா­­ருக்கு அவர் தேடும் பொருளை அதி விரை­வாக தேடிக் கண்­டு­பி­டித்து காண்­பிக்­கி­றது.
உதா­­ணத்­துக்கு  கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்­பாட்­டாளர் அதற்கு அத­னை­யொத்த சாவி­யொன்றை காண்­பித்து அது மாதி­ரி­யான பொருளைக் கண்­டு­பி­டிக்க கட்­­ளை­யி­டு­கையில், அவர் அந்தக் கண்­ணா­டியை  அணிந்­தி­ருக்­கையில் சாவியை எங்கு வைத்தார் என்­பதை  சுய­மாக ஞாப­கப்­­டுத்தி அவ­ருக்கு அது இருக்கும் இடத்தைக் காண்­பிக்­கி­றது.
பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு கீழ் அந்த சாவி இருக்கும் பட்­சத்தில் அதனை மேற்­படி கருவி தனது ஞாப­கத்­துக்கு கொண்டு வந்து அது தொடர்பில் பயன்­பாட்­டா­­ருக்கு அறி­விக்­கி­றது.
அத்­துடன் பயன்­பாட்­டாளர் பொது இடத்தில் தனது பணத்தைக் கொண்ட சிறு கைப்பையை தவறவிட்டு வரும் போதும் அது தொடர்பில் அந்த உபகரணம் பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கிறது.


වාෂ්ප වන ජලය සහ රහස් සංකේත තුල සැඟවුණු සත්‍යය

සමහර මිනිස්සු බුලත් කොළය තුලින්ද අනාගතය දකිති. David Simmon Duffin උතුරණ ජලය පිළිබඳව වඩා විමසිලිමත් විය. උතුරණ ජලය ද්‍රව අවස්ථාවේ සිට වායු අවස්ථාවට පරිවර්ථනය වීම සඳහා ජල අණුවල පොරකෑමේ ක්‍රමවේදය  ගණිතමය ගැටළුවක් ලෙස සැලකීමට ඔහුට අවශ්‍ය විය. එහෙත් න්‍යායාත්මක භෞතිකවේදීයෙක් වු ඔහුට එය පහසු කටයුත්තක් නොවීය.මෙවැනි සංසිද්ධි සම්බන්ධව අසාමාන්‍ය අයුරින් කරන සියලු සොයාබැලීම් වලදී මතුවන ඒකාබද්ධ ගණිතමය රටාවන් විශ්වය සම්බන්ධ ගැඹුරු ගැටළු විග්‍රහය සඳහා ප්‍රයෝජනවත් වේ යයි ඔහුගේ උපකල්පනයයි.

උතුරණ ජලයෙන් හොඳ තේ කෝප්පයක් සාදාගෙන රසවිඳිනු මිස ඒ ගැන වෙන කුමන කතාද ? එහෙත් එම සංසිද්ධිය කෙරෙහි ගැඹුරට කිමිදි බැලීම මඟින් ජලය කෙසේ උතුරණ ස්වරූපයට මාරුවේද ? එහිදි කුමන  රටාවන් මතුවේද ? එම රටාව මඟින් සියළු පදාර්ථ තම ස්වරූපය වෙනස් කරගන්නා ආකාරය හඳුනාගත හැකි වේද ? පදාර්ථ චුම්බක හෝ අධි සන්නායක වීම ඉලෙක්ට්‍රොන වල සාමුහික ස්වභාවික ගුණ නිසා සිදුවේද?  නැතිනම් සෑම පදාර්ථයක්ම ස්කන්ධය ලබා ගන්නා සංකීර්ණ අන්තර් ක්‍රියාවක්ද? මෙවැනි බොහෝ නොවිසිඳුණු ගැටළු මේ හා සමාන ගණිතමය න්‍යායයකින් ක්‍රියාත්මක වේද ?

ඒ අනුව උතුරණ ජලය සංසිද්ධිය සදහා  ගණිතමය සංකේතනයක් සොයාගත හැකි නම් කාර්යක්ෂම චලනය සහ ඉලෙක්ට්‍රෝන විද්‍යාව මගින් ගුරුත්වය පිළිබඳ නව ප්‍රභාමවත්, කොන්ටම් න්‍යායකට පමණක් නොව එය ඉහත ගැටළු විසදීම සදහාද යම් ආකාරයකින් දායක කර ගත හැකිය. නිව් ජර්සි Princeton හි පිහිටි උසස් අධ්‍යයනයන් සඳහා වු ආයතනයේ Simmon – Duffin සහ ඔහුගේ පර්යේෂණ කණ්ඩායම මෙම ක්‍රියාව සදහා ගණිතමය සංකේතනයක් හෙවත් ගණිතමය ස්වරුපයේ න්‍යායාත්මක ප්‍රකාශයක් සොයාගත් බව ප්‍රකාශ නොකරන නමුත් ඔව්හු පරම්පරා කිහිපයක පරීක්ෂණයන්ට වඩා පියවර කිහිපයක් ඉදිරියෙන් සිටින බව ප්‍රකාශ වේ. 

මෙම තත්වය  පිළිගැනීම සඳහා ශතවර්ෂයකට පෙර මතු වු ගැටළුවකට මූලික වූ හේතුව ප්‍රයෝජනයට ගෙන තිබේ. භෞතිකඥයින් සරලභාවයට බොහෝ කැමතිය. ඔවුන්ගේ ශික්ෂණය නම් ලොව තුල සිදුවන යම් ක්‍රියාවක් තියුණු ලෙස නිරීක්ෂණය කර එම ක්‍රියාව පාලනය වන ගණිතමය න්‍යායක් නිර්මාණය කිරීමයි.උදාහරණයක් ‍ලෙස ග්‍රහලෝකවල පරිභ්‍රමණය සම්බන්ධව පැවති දත්ත සම්බන්ධ කර ගණිත න්‍යායන් තුනක් Johannes Kepler විසින් බෙහෝ කලකට පෙර අතිශය නිවැරදි ලෙස ඉදිරිපත් කිරීම සැලකිය හැකිය.  
     

අන්තර්ජාලයේ පිළිගත් විද්‍යාත්මක ප්‍රභව ඇසුරෙණි.  
 සකස්කළේ : හර්ෂ ලංකේශ්වර , විද්‍යා හා තාක්ෂණ නිලධාරි

March 2, 2017

දියවැඩියාවට අඹ කොළ

දියවැඩියාව යනු කුමක්ද?
රැධිරයේ ඇති වන සමාන්‍ය ප්‍රමාණයට වැඩි ග්ලූකොස් තත්වය දිය වැඩියාව ලෙස හැදින්වේ.
සිරැරේ ඉන්සියුලින් නිෂ්පාදනයේ හෝ ස්‍රාවයේ ක්‍රියාකාරිත්වයේ අඩුවීමකින් දියවැඩියාව ඇති වේ.
ඉන්සියුලින් යනු අග්න්‍යාශයේ නිපදවන හෝමෝනයකි.
ඉන්සියුලින් රැධිරයේ ඇති ග්ලූකෝස් ශක්තිය ලබා ගැනීම සදහා සෛල තුලට ඇතුලු වීමට උපකාරී වේ.
එමගින් රැධිරයේ ග්ලූකොස් මට්ටම පාලනය කරයි.

දියවැඩියාවේ විවිධ වර්ග
1 වන වර්ගයේ දියවැඩියාව
අග්න්‍යාශයේ නිපදවන බීටා සෛල විනාශ වීම නිසා වෛරස ආසාදනයක් නිසා ස්වප්‍රතිශක්තී පද්ධතියේ වෙනසක් නිසා සිදුවේ.මෙය ඇතිවන් විශේෂයෙන් ළමාඅවධියේදීය.
                                                                                      
2වන වර්ගයේ දියවැඩියාවමෙය හේතු සාධක කිහිපයක් නිසා ඇතිවේ.මෙම හේතු සාධක වැලැක්වීමෙන් මෙම අවස්ථාව වලක් වා ගත හැක.      
ගර්භනී අවධියේදී ඇති වන දියවැඩියාව
ගර්භනී අවස්ථාවේදී ඇතිවන හෝමෝන වෙනස්කම් නිසා ඇතිවේ.දරැවා ප්‍රසූත කිරීමෙන් පසුව මෙම තත්වය නැවත යථා තත්වයට පත්වේ.
දිවැඩියාව ඇති වීමට වයස්භෙදයක් නැති අතර සතුන්ට පවා ඇති විය හැක.

දියවැඩියාව නිසා ඇති වන සංකූලතා
විශේෂයෙන් අධික ග්ලූකෝස් ප්‍රමාණය ශරීරයේ අවයව පටක වලට හානි පමුණුවයි.
එමගින් දිගුකාලීන සංකූලතා ඇති විය හැක.
දියවැඩියාව නිසා ඇති වන සංකූලතා
අන්ධ වීම
දෙපා වල ඇති වන සුව නොවන තුවාල
වැඩිපුර මුත්‍රා පිටවීම
අධික පිපාසය සහ තොලකට වියලීම
කෙණ්ඩා පෙරලීම
කෙටි කලකින් බර අඩුවිම
මුත්‍රා මාර්ගය අසලඇතිවන දිලීර ආසාදන
දියවැඩියාව පාලනය කිරීම සදහා නොයෙකුත් ඖෂධීය ශාක බාවිතා කෙරේ.

දියවැඩියාව නිසා ඇතිවන සංකූලතා මගහැරීම සදහා අඹ කොල යොදා ගත හැකි බව කරන ලද පර්යේෂණ වාර්තා අපට හදුනා ගත හැක.
අඹ කොල චීන ජාතියකයන් විසින් ඈත අතීකයේ සිටම දියවැඩියාව සුව කිරීම සදහා යොදා ගෙන ඇත.මෙම පත්‍ර වල ක්‍රියාකාරී සංයෝග මෙසේ  හදුනා ගෙන ඇත.
  • Caffeic acid
  • Mangaferin
  • Flavonoids
  • Gallic acid 
පර්යේෂණ වලින් පෙන්වා දී ඇති කරණු අනුව

  • මෙම පත්‍ර වල විශාල වශයෙන් ඇන්ටිඔක්සිජන් අඩංගු බැවින් ශරීරයේ ඇති විෂ ඉවත් කරවයි.
ඉන්සියුලින් නිෂ්පාදනය වැඩි කිරීම මගින් රැධිරයේ සීනි මට්ටම අඩු කරයි.
තවද මෙම පත්‍ර වල බහුල වශයෙන් තන්තු ,විටමින් සී සහ පෙක්ටීන් අඩංගු බැවින් රැධිරයේ කොලෙස්ටරෝල් මට්ටම අඩු කර හෘදය නිරෝගීව තබා ගැනීමට වැදගත් වේ.
පත්‍ර වල විටමින් ඒ බහුල බැවින් දියවැඩියාව නිසා ඇතිවන පෙනීමේ දුර්වලතා මගහරවයි.
වකුගඩු වල ගල් දිය කර වකුගඩු වල නිරෝගීව පවත්වා ගැනීමට මෙම පත්‍ර වල අඩංගු සංඝටක හේතු පාදක වේ.

අඹ පත්‍ර භාවිතා කරන ආකාරය
අඹ පත්‍ර කිහිපයක් විනාඩ් 15 ක් පමණ කම්බා රැයක් තබා හිස් බඩ පානය කිරීමෙන් දියවැඩියාව වලක්වා ගත හැකි වේ.
ලපටි පත්‍ර ද ගත හැක.පත්‍ර වියලා කුඩු කර ගෙනද භාවිතා කල හැකිවේ.
මෙසේ මාස 03ක් පමණ භාවිතා කිරීම මගින් සාර්ථක ප්‍රතිඵල ලබා ගත හැකි වේ.
උණ ,අතීසාරය සහ ස්වසන රෝග වලටද අඹ පත්‍ර ගුණදායකය.
රෝග මැඩ පැවැත්වීමේ හැකියාව පුද්ගලයාගෙන් පුද්ගලයාට වෙනස් වේ.
අඹ පලතුරක් වශයෙන් ඇති ගුණ පිලිබදව විවිධ පර්යේෂණ වලින් පෙන්වා දී ඇත.
බොහෝමයක් ශාක වර්ග දිවැඩියාව පාලනය සදහා යොදා ගැනේ.නමුත් අඹ කොළ භාවිතා
කිරීමෙන් දියවැඩියාව පෙර අවධියේදී සම්පුර්ණ සුවයක් ලැබිය හැකි බව පර්යේෂණ වාර්තා පෙන්වා දී ඇත.
මෙවැනි විශ්මිත ශාක විශ්වයේ තවත් තිබිය හැක.

උපුටා ගැනිම-health benifits of mango leaves and science daily news

දරුවන්ගේ ආකල්ප වර්ධනයට මිත්‍රශීලි රොබෝවරු

ඔබේ දරුවාට හො උපදේශකයෙක් ලෙස ක්‍රියාකළ හැකි වීම කෘතිම බුද්ධියේ නවතම වර්ධනයයි. මිත්‍රශීලි රොබෝවරයකුගේ පෞරෂත්වය මඟින් දරුවන්ගේ හැසිරීමට බලපෑම් කිරීමේ හැකියාවක් ඇති බව පර්යේෂණාත්මක අධ්‍යයනයකදී හඳුනාගෙන ඇති බව  වාර්තා වේ. උදාහරණයක් ලෙස මෙම අධ්‍යයනයේදී උද්යෝගීමත් හෝ මධ්‍යස්ථ (උදාසීන) වැනි පෞරෂයන් ඇති රොබෝවරු සමඟ ක්‍රීඩාවේ යෙදීමෙන් දරුවන් විවිධ ක්‍රියාකාරකම් වල වැඩි කාලයක් ගත කිරීමට මෙන්ම ඒ සඳහා අමතර ජවයක් යෙදවීමටද යොමුවන බව පැහැදිලි වී තිබේ.

මේ සඳහා Tega නම් මිත්‍රශීලි රොබෝවරයෙක් භාවිතා කරමින් පර්යේෂණ මාලාවක් දියත් කරමින් අධ්‍යනය සිදු කර ඇත. දරුවන්ගේ හැසිරීම සඳහා Tega ගේ පෞරෂත්වය කෙසේ බලපාන්නේ දැයි දැන ගැනීම සඳහා විවිධාකාර ප්‍රතිචාර දැක්විය හැකි ලෙස Tega ක්‍රමලේඛ කර තිබේ.

පර්යේෂණ මඟින් අපේක්ෂා කළ අවසාන ජයග්‍රහණය නම් දරුවන් තුල සෙමින් ඇතිකර වර්ධනය කළ යුතු ගුණවත් හා නැණවත් චර්යාවන් දරුවාට ලබා දිය හැකි මිතුරෙකු නිර්මාණය කිරීම බව පර්යේෂණ කණ්ඩායමේ සාමාජික හා ඊශ්‍රායලයේ ටෙල්අවිව් විශ්ව විද්‍යාලයේ Goren Gorden ප්‍රකාශ කරයි.

දරුවන් 40 ක් Tega සමඟ ප්‍ර‍හේළිකා තරඟයකට සහභාගි විය. ඉන් ළමයින් 20 ක් ඉදිරියේ Tega උදාසීන (මධ්‍යස්ථ) පෞරෂත්වයක් ඇතිව තරඟ කරන ලදි. එනම් තරඟයෙන් Tega ජයගත් විට මම ගැටළුව විසඳුවා ලෙසද, පරාජය වූ විට ඒක හරි අමාරුයි යන වදන් වලින් ප්‍රතිචාර දක්වන ලදි. එහෙත් ඉතිරි දරුවන් ඉදිරියේ Tega වඩා තරඟකාරි ස්වරූපයකින් (උද්යෝගිමත්) තරඟ කරමින් ජයග්‍රහණය කල විට ඒක හරි අමාරුයි ඒත් මම හොඳින් උත්සහ කර ඔබව පරාජය කළා යැයිද Tega පරාජය වූ විට  ඔබ බොහොම හොඳින් තරඟ කර මා පැරදුවා යැයිද ප්‍රකාශ කරන ලදි.

Tega ගේ මෙම විවිධ වදන් ප්‍රතිචාර මඟින් හැසිරීමේ වෙනස පැහැදිලි කිරීමට අපහසු වුවත් එමඟින් වූ බලපෑම අනුව දරුවන්ගේ ප්‍රතිචාරය පැහැදිලිව හඳුනාගත හැකි විය. දෙවන කණ්ඩායමේ දරුවන් වඩා වැඩි උත්සහයකින් තරඟ කළ අතර පරාජය වූ විට ජයග්‍රහනය සඳහා වූ ඔවුන්ගේ අධිෂ්ඨානය වැඩි වූ බවද මැසචුසෙටිස් (Massachusetts) තාක්ෂණ ආයතනයේ Hae Won Park පවසයි. ඔහු මෙම අධ්‍යයන කණ්ඩායමේ මූලිකයාය.

දරුවන් කතන්දර අසා සිට කතාව තුල ජීවත් වීමට පටන් ගන්නා විට ඔවුන් මවට හෝ කතාන්දරය පවසන්නා දෙසට වඩාත් ළං වෙමින් කතාන්දර කරු (මව) දෙස ඉතා ආශාවෙන් බලා සිටින බව නිරීක්ෂණය කල හැකිය. කෙසේ වෙතත් ඒ ආකාරයෙන් රසවත් ලෙස කතාන්දර කීමට සැමටම නොහැකිය. එහෙත් රසවත් ලෙස කතාන්දර කීම දරුවාට ඉතා වැදගත් වේ.

මේ අනුව දෙපසින් සිටින් වර්ග දෙක එහෙත් පෙනුමින් එකහාසමාන Tega රොබෝවරුන් දෙදෙනකුට කතාන්දරයක් කීමට දරුවන් යොමු කරන ලදි. දරුවා කතාන්දරය රසවත් කර කියන විට දකුණු පස සිටි Tega  කතාන්දරය තුල ජීවත් වන දරුවකු සේ පෙර සඳහන් කළ පරිදි විවිධ ප්‍රතිචාර දක්වමින් දරුවාගේ කතාන්දරය අසා සිටියේය. වම් පසින් සිටි Tega විශේෂ ප්‍රතිචාර නොමැතිව කතාව අසා සිටියේය.  පසුව කළ විමසුමේදී  දරුවන් දකුණු පස සිටි Tega ට කතාන්දර කීමට බොහෝ කැමැත්තක් දැක්වූ අතර දරුවා කෙරෙහි Tega ගේ දැඩි  අවධානය නිසා දරුවා දිගු කථා කීමටත්, සංකීර්ණ දෙබස් භාවිතා කරමින් තම ශබ්ද කෝෂය වර්ධනය කර ගැනීමටත් උත්සහ කළ බව පැහැදිලි විය. 
            
අන්තර්ජාලයේ පිළිගත් විද්‍යාත්මක ප්‍රභව ඇසුරෙණි

සකස්කළේ : හර්ෂ ලංකේශ්වර , විද්‍යා හා තාක්ෂණ නිලධාරි

https://youtu.be/sF0tRCqvyT0

වමත හෝ දකුණත හුරුවීම

අප වැඩි දෙනෙකු දකුණත් වේ. එහෙත් අප අතර සිටින තවත් සෑහෙන පිරිසකට හුරුව ඇත්තේ වමතයි. කාලයක සිටම හුරුවීමට අප දැක්වූ කැමැත්ත හෝ උපතින්ම ලැබුණු ස්නායු රැහැන් වල යම් විශේෂත්වයක් නිසා මෙලෙස වමත හෝ දකුණත හුරුවීම සිදුවූයේද? අපගේ කේන්දරවලද සදහන්ව නැති මෙම වමත හෝ දකුණත හුරුවීමෙන් සුවිශේෂී හැකියාවන් ඇතිවේද?

eLife සගරාවේ පළකර ඇති නවතම අධ්‍යනයකට අනුව වමත හෝ දකුණත හුරුවීමට මොළයේ හෝ ස්නායු වර්ධනයේ සම්බන්ධතාවයක් නොමැති බව පැහැදිලි වේ. එහෙත් මෙම වෙනස් වීම සදහා ඉපදීමට පෙර සිට ජෛව ක්‍රියාවලිය තුළ වූ සහජය බලපා ඇතැයි වාර්තා වේ. එනම් එය මොළයේ නොව කශේරුකාවේ ජාන ක්‍රියාවලියක විශේෂ කැළඹීමකි.

Ruhr විශ්ව විද්‍යාලයේ ජෛව-භෞතිකවේදියකුගේ මුලිකත්වයෙන් යුත් මෙම පර්යේෂක කණ්ඩායම ජර්මනිය, නෙදර්ලන්තය සහ දකුණු අප්‍රිකාව යන රටවල සාමාජිකයන්ගෙන් සමන්විතය. ගර්භාෂය තුළ වැඩෙන බිළිදුන්ගේ සුසුම්නාව වර්ධනය සිදු කරන ජාන ප්‍රකාශන සම්බන්ධව මෙම පර්යේෂක කණ්ඩායම ඉතා සුපරික්ෂාකාරිව නිරීක්ෂණය කර තිබේ. ගර්භානිභාවයේ අටවන සහ දොලස්වන සතිය ඇතුලත කාලය මෙහිදී ප්‍රධාන කොට සලකා ඇත. මුල සුසුම්නාවේ ක්‍රියාකාරිත්වය මෙමගින් හදුනාගැනීමට උත්සහ කර ඇති අතර එහිදී යම් අසමමිතිකතාවක් එහි ක්‍රියාත්මක වන බව පැහැදිලි වී තිබේ.

පෙර හදුනාගෙන නොතිබුණු මෙම නව ක්‍රියාකාරිත්වය ශරීරයේ චලනය කෙරෙහි මොළයේ බලපෑම ආරම්භ වීමට බොහෝ කාලයකට පෙර සිදුවේ. එය සත්‍යලෙසම කශේරුකාවට සම්බන්ධය. හස්තය, පාදය සහ බාහු වලට විදුලිය සම්ප්‍රේෂණය කිරීම සදහා සුසුම්නාවේ කොටස් මධ්‍යගතව වග කියනු ලැබේ. මෙහිදී ගොඩනැගෙන අසමමිතිය වමතින් හෝ දකුණතින් ලිවීමට පද්ගලයකු යොමු වීම අර්ථ නිරුපනය කෙරේ.

තවද සමමිතිකත්වය සදහාද හේතුව පර්යේෂණ කණ්ඩායම සොයාගෙන තිබේ. ඒ සදහා සාමාන්‍ය ප්‍රවේනි ජාන වෙනස්කම් හෝ ඌරුව බල නොපාන බවත් ගර්භාෂය තුළ බිළිදාගේ වර්ධනය සිදුවන කාලය තුළ මුහුණදෙන පාරසරික සාධක බලපාන බවත් පර්යේෂක කණ්ඩායම ප්‍රකාශ කරයි. මෙම පාරසරික සාධක සම්පුර්ණයෙන් හදුනාගෙන නැති නමුත් වර්ධනය වන බිළිදා වටා එන්සයිම ක්‍රියාකරන ආකාරය වැදගත් බව හදුනාගෙන තිබේ.


අන්තර්ජාලයේ පිළිගත්විද්‍යාත්මක ප්‍රභව ඇසුරෙණි.

සකස්කළේ : හර්ෂ ලංකේශ්වර , විද්‍යා හා තාක්ෂණ නිලධාරි