October 3, 2013

புதிய தலைமுறை கணனி: இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு


அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற
காரீய நுண் குழாய் (carbon-nanotube) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

சிலிக்கனை விட மேம்பட்ட காரீய நுண் குழாய்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும். குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணனி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியியலாளரும், கணனிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில், "புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த காரீய நுண் குழாய், சிலிக்கனைவிட சிறப்பானது என பேசப்பட்டு வந்தது.

அந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில், அந்த கணனியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் அமைந்துள்ளன' என்றார்.

0 comments:

Post a Comment